தாம்பரம், ஜன. 5- தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் முதலாமாண்டு நிறைவுச் சிறப்புக் கூட்டம் 7.12.2024 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
தி.மு.கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ஆதிமறான் தலை மையுரையாற்றி சிறப்புச் செய்தார். மாவட்ட கழகச் செயலாளர் கோ.நாத்தி கன் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் மற்றும் ம.தி.மு.கழக மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர் துரை.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் கழக பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வன் சிறப்புரை ஆற்றினார்.
முத்தமிழறிஞர் கலைஞர்
தம் உரையில் கழகத்தின் வரலாற்று சிறப்புகளையும் தந்தை பெரியார் அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் தொண்டர்களை திரட்டி இயக்கம் கண்டு மிக கடுமையாக உழைத்து பல தரப்பட்ட சமூக மக்களை ஒன்றிணைத்து பேராண்மை மிக்க தலைவராக திகழ்ந்து மக்கள் தலைவராக இன்று புகழ் மங்கா தலைவராக திகழ்ந்து வருகிறார்கள், அறிஞர் அண்ணா அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் இந்த தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டு என்பது உழைப்பு,பகுத்தறிவு,மனித நேயம் மற்றும் மான வாழ்வு முதலிய நற்பண்புகளை சாமானிய மக்களிடம் புகட்டி மக்களை விழிப்படைய வைத்தார், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சி என்பது தமிழ் இன மக்களின் உரிமைக் குரல்களை இந்திய ஒன்றியரசிடம் மாநில உரிமைக் குரலை ஓங்கி எடுத்துரைத்து அதன் மூலம் உரிமைக் குரலை வென்றெடுத்து இனமானம் காத்தவர்,
திராவிட இயக்க வரலாறு
இன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் இன்றையக் காலக்கட்டத்திலும் ஆதிக்க ஜாதிகளிடமும் ஒன்றியரசிடமும் எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் மாநில சுயாட்சி, மாநில உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் எப்பாடு பட்டாவது மாநில மக்களின் கல்வி, பகுத்தறிவு, இட ஒதுக்கீடு ஆகிய உரிமைகளை தம் உழைப்பின் மூலம் இத்தமிழ்ச் சமூகம் பெற்ற உரிமைகளை மற்றும் திராவிட இயக்க வரலாறுகளை எடுத்துரைத்து தம் உரையை நிறைவுச் செய்தார்.
பங்கேற்றோர்
இந்நிகழ்வில் கே.மீனாம்பாள், மு.நாகவள்ளி, அ.ப.நிர்மலா,க.வெண்ணிலா, பெ.அனுசுயா, மனித நேய மக்கள் கட்சி மாநில பொறுப்பாளர் தாம்பரம் எம்.யாகூப், அயூப், சபி.வி.பன்னீர்செல்வம், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் சு.மோகன்ராஜ், சீ.லட்சுமிபதி,ரெ.கதிர்வேல், மா.குணசேகரன், இரா. உத்திரகுமாரன், பெ.சி.ஜெயராமன், எஸ்.ஆர்.வெங்கடேஷ், மா.இராசு, பூவை.க.தமிழ்ச்செல்வன், சோ.பாலு, மணிகண்டன், சுகுமார்,முரளீதரன், சா.தாமோதரன்,ம.சு.இராமசந்திரன், லெ.சுப்ரமணியன்,முனைவர் பெ.அண்ணாதுரை,ஜெ.பாபு ஜனார்த்தனன்,மா.சீனிவாசன், க.தமிழினியன்,ந.கதிரவன், எஸ்.விஜயராகவன்,இரா.இராகதீபன், ராஜ்குமார், நா.குணசேகரன்,அரங்க. நாராயணன்,ஆசிரியர் அ.சிவக்குமார்,இனியவன்,ஜோதி,மு.பாரிவள்ளல்,இரா.இராகதீபன், தே.சீனிவாசன்,அண்ணாதுரை, உரத்தநாடு சங்கர், எஸ்.இராஜா, எஸ்.சத்தியவதி, சூர்யா துரைமுத்து, பாரதி, எஸ்.விஜயராகவன், வே.மதிவாணன், சந்திரசேகர், தனசேகரன், ஜெயகுமார், கருணாகரன், அரிச்சந்திரன், ந.கதிரவன் மற்றும் நிலவன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுச் சிறப்பித்தனர்.