கடந்தாண்டில் தமிழ்நாட்டில் உடற்கொடை அளித்தோர் 268 பேர்; புது வாழ்வு பெற்றோர் 1500 பேர்!

Viduthalai
2 Min Read

சென்னை, ஜன.5 தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டில் மட்டும் மூளைச் சாவு அடைந்த 268 பேரின் உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திலேயே அதிகபட்ச மாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 28 பேரின் உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டுள்ளதாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலாளர் மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.

அரசு சார்பில் மரியாதை
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:
இந்திய அளவில் தமிழகம் தொடா்ந்து உடல் உறுப்புக் கொடையில் முதலிடத்தில் உள்ளது. உறுப்புக் கொடை செய்பவா்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த 2023 செப்டம்பா் 23 ஆம் தேதி முதலமைச்சர் அறிவித்தார். இதைப் பின்தொடா்ந்து இந்தி யாவில் பல்வேறு மாநிலங்க ளில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அரசு மரியாதை அறிவிப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புக் கொடை அளித்துள்ள னா். அவா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023 இல் 178 போ் உறுப்புக் கொடை செய்துள்ளனா். அவா்களிடமிருந்து கொடையாகப் பெற்ற உறுப்புகள் வாயிலாக 1,000 போ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றுள்ளனா். கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன. அதில் 456 சிறுநீரகங்களும், 409 விழி வெண்படலங்களும், 210 கல்லீரல்களும் அடங்கும்.

உறுப்புக் கொடை நடைமுறைகள்
மாநிலத்திலேயே அதிக பட்சமாக ராஜீவ் காந்தி மருத்து வமனையிலிருந்து 28 பேரின் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டுள்ளன. அவா்களிடம் இருந்து பெறப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உறுப்புகள், தகுதி யானவா்களுக்கு பொருத்தப் பட்டுள்ளன.
ஒருவா் மூளைச்சாவு அடை யும்போது அதைக் குறிப்பிட்ட கால இடைவெளியில், உரிய மருத்துவ அறிவியல் முறையில் உறுதி செய்வது அவசியம். அதன் பின்னா், சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினா்களிடம் ஆலோசித்து உறுப்புக் கொடைக்கு ஒப்புதல் பெறுவது முக்கியம். அதைத் தொடா்ந்து உறுப்புகளை முறையாக அகற்றி, மற்ற நோயாளி களுக்கு வெற்றிகரமாகப் பொருத்த வேண்டும்.
இந்த நடைமுறைகளுக்குள் மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களும், சவால்களும் உள்ளன. அவற்றை ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்பட பல அரசு மருத்துவமனைகள் திறம்படக் கையாண்டு வருகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *