23.07.2023 ஞாயிற்றுக்கிழமை

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் இணைந்து நடத்தும் பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை அழைப்பிதழ்

புதுச்சேரி :  காலை 9:00 மணி முதல் மாலை 6:00 வரை ⭐ இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி – 605 011. ⭐நிகழ்ச்சி நிரல்: சுயமரியாதைச் சுடரொளி மு.ந.நடராசன் நினைவு மேடை ⭐ காலை 8:30 மணி முதல் உறுப்பினர் பதிவு நடைபெறும் ⭐ காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை மு.ந.நடராசன் படத்திறப்பு – தொடக்க விழா ⭐ வரவேற்புரை: ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐ தலைமை: நெ.நடராசன் (பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) ⭐ முன்னிலை: வே.அன்பரசன் (தலைவர், புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம்) றீ ⭐ நிகழ்ச்சி நெறியாள்கை: வி.இளவரசி சங்கர் (துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐தொடக்கவுரை: இரா.தமிழ்ச் செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தமிழ்நாடு), சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகம்), வி.மோகன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) 

👉பயிற்சி வகுப்புகள்: 10:00 மணிமுதல் 11:00 மணிவரை – சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) – பண்பாட்டுப் படையெடுப்பு 

👉 11:00 மணிமுதல் 11:15 மணிவரை – தேநீர் இடைவேளை 

👉11:15 மணிமுதல் 12:15 மணிவரை – கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) – பெரியாரின் வாழ்வியல் சிந்தனைகள் 

👉12:15 மணிமுதல் 1:15 மணிவரை – வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) – பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் 

👉 1:15 மணிமுதல் 2:15 மணிவரை – உணவு இடைவேளை 

👉 2:15 மணிமுதல் 3:15 மணிவரை – மருத்துவர் இரா.கவுதமன் – மருத்துவம், பில்லி, சூனியம், ஆன்மா, நரகம் 

👉 3:15 மணிமுதல் 3:30 மணிவரை – தேநீர் இடைவேளை 

👉3:30 மணிமுதல் 4:30 மணிவரை – மருத்துவர் கணேஷ் வேலுச்சாமி (அறிவியல் ஆர்வலர்) – அறிவியல் மனப் பான்மையை வளர்ப்போம் 

👉4:30 மணிமுதல் 5:30 வரைமுதல் – முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) – பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள் 

👉நிறைவு விழா: சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்குபவர்: இரா.விசுவநாதன் (மேனாள் அமைச்சர், புதுச்சேரி மாநிலம்), வீர.பாலகிருஷ்ணன் (மேனாள் காவல்துறை கண் காணிப்பாளர், புதுச்சேரி) 

1. பயிற்சிக் கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்) 

2. மகளிர் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணமில்லை. 

3. அனைத்து வகுப்புகளிலும் தவறாமல் கலந்து கொள்பவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படும். 

4. ஒழுங்கின்மையில் ஈடுபட்டால் உடனடியாக வெளியேற்றப் படுவீர்கள். 

5. குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

………………………………

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

விளாங்குடி :  மாலை 5:00 மணி ⭐ இடம்: சிவன் கோயில் அருகில், விளாங்குடி ⭐ தலைமை: மு.கோபாலகிருட்டிணன் (மாவட்டச் செயலாளர்)⭐ வரவேற்புரை: வி.ஜி.மணிகண்டன் (ஒன்றிய இளைஞரணித் தலைவர்) ⭐ முன்னிலை: சு.மணி வண்ணன் (காப்பாளர்), இரத்தின.இராமச்சந்திரன் (மாநில அமைப்பாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ தொடக்கவுரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) ⭐ சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்), விடுதலை. நீலமேகன் (மாவட்டத் தலைவர்), க.இராமநாதன் (மாவட்ட செயலாளர், ம.தி.மு.க.), மா.அன்பழகன் (ஒன்றிய கழகச் செயலாளர், தி.மு.க.) ⭐ மாலை 4:00 மணியளவில் பெரம்பலூர் மு.விஜயேந்திரனின் மந்திரமா? தந்திரமா? அறி வியல் கலை நிகழ்ச்சியும் அல்லி நகரம் கவிஞர் சீனி.அறிவு மழையின் பகுத்தறிவு இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறும் ⭐ நன்றியுரை: கி.கமலக்கண்ணன் (ஒன்றிய இளைஞரணிச் செயலாளர்) ⭐ இவண்: அரியலூர் ஒன்றிய திராவிடர் கழகம்.

…………………………

திருவாருர் மாவட்டப் பகுத்தறிவு ஆசிரியரணி நடத்தும் பாராட்டுவிழா

திருவாருர் ஒன்றிய மேனாள் ப.க தலைவர் இரா.கவுதமன், நன்னிலம் ஒன்றிய மேனாள் ப.க. செயலாளர் இரா.தன்ராஜ், திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி மேனாள் தலைவர் சு.ஆறுமுகம், திருவாரூர் மாவட்ட ப.க. செயலாளர்  க.அசோக்ராஜ் ஆகியோரின் பணி நிறைவுப் பாராட்டுவிழா..திருவாரூர்: மாலை 6:00 மணி ⭐இடம்: தமிழர் தலைவர் அரங்கம். பனகல் சாலை, திருவாரூர் ⭐வரவேற்புரை: மு.தமிழ்நேயன் (நகரத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) ⭐ தலைமை: கோ.செந்தமிழ்ச்செல்வி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) ⭐ முன்னிலை: வீர.கோவிந்தராசு (மாவட்டச் செயலாளர்), கி.அருண்காந்தி (மாவட்டத் துணைத் தலைவர்) க.முனியாண்டி,  அரங்க.ஈவேரா, ஆர்.எபனேசர் ஜான்சன், மீ.இரவி, எஸ்.கரிகாலன், நாத்திக. பொன்முடி, ⭐ பணிநிறைவு பெறும் தோழர்களைப் பாராட்டிச்  சிறப்பு செய்து நினைவுப்பரிசு வழங்கி உரை: ⭐ வீ.மோகன்  (மாவட்ட கழக தலைவர்), சு.கிருஷ்ண மூர்த்தி, (தலைமைக் கழக அமைப்பாளர்), க.வீரையன் (மாநில விவசாய அணி செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி)  ⭐ சிறப்புரை: இல.மேகநாதன் (மாநில அமைப்பாளர், பகுத்தறி வாளர் கழகம்), கவிஞர் கோமல் தமிழமுதன், மு.க.தமிழாசிரி யர் (ப.நி.) ⭐நன்றியுரை: மீ.மேகநாதன் ஒன்றியத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி திருவாரூர்.  ⭐ ஏற்பாடு: பகுத்தறிவு ஆசிரியரணி திருவாரூர் மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *