மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று (03.01.2025) சென்னை, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 67ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பல் மருத்துவ பட்டப்படிப்பு நிறைவு செய்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி விழா பேருரையாற்றினார்கள். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் (பொ) முனைவர் ப.செந்தில்குமார், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.ஜெ.சங்குமணி, சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.தேரணிராஜன், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.சிறீ.பிரேம்குமார், துணை முதல்வர் மரு.சி.சபரிகிரிநாதன் மற்றும் பல் மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், பல் மருத்துவ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழா
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books