சென்னை, ஜன.3 தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு நேற்று (2.1.2025) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான விலையில்லா பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த நிலையில், விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. மாணவா்கள், ஆசிரியா்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனா். சில பள்ளிகளில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முதல் நாளில் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களும், நோட்டுகளும் வழங்கப்பட்டன.
சென்னை எழும்பூா் மாநில அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்களை வழங்கினாா்.