முனைவர் சிந்தை மு.ராசேந்திரன் மறைவு

Viduthalai
1 Min Read

திராவிடர் கழகம் சார்பில் இறுதி மரியாதை, குடும்பத்தினரிடம் தமிழர் தலைவர் ஆறுதல்

அரூர், ஜன. 3- சிறந்த பகுத்தறிவாளரும், மேனாள், திமுக தொண்டரணி மாநில அமைப் பாளரும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரும், மத்தூர் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான முனைவர் மு.ராசேந் திரன் திடீர் உடல் நிலை குறைவால் 25.12.2024 ஆம் தேதி காலை 7 மணி அளவில் மறை வுற்றார்.

இறுதி மரியாதை
மத்தூர் கலைமகள் பள்ளி மாணவ மாணவிகளின் விருப்பத் திற்கு இணங்க அவரது உடல் மத்தூர் கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், திராவிடர் கழக பொறுப்பாளர்கள், திமுகவினர் பொதுமக்கள் என 2000 க்கும் மேற்பட்டோர் கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில பகுத்தறிவாளர் கழக துணை பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மகளிர் அணி தலைவர் இந்திரா காந்தி, மாவட்ட துணைத் தலைவர் வண்டி ஆறுமுகம், தனஞ்செயன், ஒன்றிய தலைவர் முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் விஸ்வநாதன், மகளிர் அணி பொறுப்பாளர் வசந்தி, முருகம்மாள், அகரன், வெங்கடாசலம், கலைத்துறை பொறுப்பாளர் இரா.பழனி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிலம்பரசன், ஆகியோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

தமிழர் தலைவர் ஆறுதல்
அதன் பிறகு சொந்த ஊரான சி. அயம்பட்டி இல்லத்தில் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. திராவிடர் கழகத்தின் சார்பில் அரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தோழர்கள், பொறுப்பாளர்கள், அவரது உருவப் படத்தினை ஏந்தி உடலுக்கு கருப்பு ஆடை போர்த்தி வீரவணக்கம் முழக்கமிட்டனர். மறைவுற்ற முனைவர் மு.ராசேந்திரன் வாழ்வி ணையர் பாரதி, மகள் அமுதினி ஆகியோரிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *