அரசு பணியாளர், ஓய்வூதியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, ஜன.3 தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 2023-2024-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் பொங்கல் பரிசு வழங்க ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
‘சி’, ‘டி’ பிரிவை சார்ந்த அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

தொகுப்பு ஊதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023-2024-ஆம் நிதி ஆண்டில் குறைந்தபட்சம் 240 நாள்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை செலவினத்தின்கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் ரூ.1,000 வழங்கப்படும்.

‘சி’, ‘டி’ பிரிவு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *