குமரி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புக் கருத்தரங்கம்

Viduthalai
1 Min Read

கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புக்கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது சிறப்புக் கருத்தரங்கத்திற்கு மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து உரையாற்றினார். கழக பொதுக்குழு உறுப்பினர் மா. மணி, மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், திராவிடர்கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, கழக கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பா.பொன்னுராசன், மாநகர தலைவர் ச.ச. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் மா.ஆறுமுகம், தமிழ் அரசன், மகளிரணி தலைவர் சு.இந்திராமணி மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், திமுக தொழிற்சங்க நிர்வாகி சி. சுகுமாறன் ஆகியோர் உரையாற்றினர். கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், கழகத் தோழர்கள் ச.ச.மணிமேகலை,எ.ச.காந்தி, டாக்டர் கலைச் செல்வன் ம.செல்வராசு, பாலகிருஷ்னன், அரிஷ், உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *