பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி செய்த மோசடி – பத்திரப்பதிவு ரத்து

1 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 20 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய் யப்பட்டுள்ளது. சென்னை – விருகம் பாக்கம் பகுதியில் சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை மோசடியாக ராதாபுரத்தில் நயினார் பாலாஜி பத்திரப் பதிவு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒப்பந்தத்தை பத்திரப்பதிவுத் துறை ரத்து செய்துள்ளது. 

இந்த உத்தரவை ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவு துறை தலைவர் பிறப்பித்துள்ளார். நயினார் பாலாஜி மீதான மோசடி புகார் குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் உத்தரவின் பேரில், நயினார் பாலாஜி செய்த மோசடி பத்திரப்பதிவு ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில பாஜக இளைஞர் அணி துணைத்தலைவாராக நயினார் பாலாஜி செயல்பட்டு வருகிறார். அவர் மோசடி செய்தது உறுதியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *