ஆனந்த விகடன் பாராட்டு

Viduthalai
1 Min Read

மதிப்பிற்குரிய ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களுக்கு,
வணக்கம்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலுக்கும்,நூல் வெளியீட்டு விழாவுக்கும் தாங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தீர்கள். அதற்கு எங்களின் நன்றி இந்தக் கடிதத்துடன் நூலின் பிரதியைத் தங்களுக்கு அனுப்பியுள்ளோம்
இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் தங்களின் நேர்காணல் மிக முக்கியமானது இன்றைய தமிழ்நாட்டுச் சூழலுக்கும் அவசியமானது தந்தை பெரியாருக்கும் புரட்சியாளர் அம்பேத்கருக்கும் இருந்த நெருக்கம், கொள்கைரீதியாக இருவருக்கும் இருந்த புரிதல்கள், திராவிட சிந்தனையும் அம்பேத்கரிய சிந்தனையும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டிய தேவை குறித்து மிக நீண்ட உரையாடல் செய்திருந்தீர்கள். வாசகர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தாங்கள் நேரம் ஒதுக்கி இந்த நூலுக்கு சிறப்பான பங்களிப்பு தந்தமைக்கு எங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

– தி. முருகன்
ஆசிரியர், ஆனந்தவிகடன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *