சட்டமன்றத்தில் உரையாற்ற ஆளுநரை பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சென்று அழைத்தார்

Viduthalai
0 Min Read

சென்னை, ஜன.3 தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் வருகிற 6 ஆம் தேதி கூடுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபுபடி ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்திற்கு வந்து உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைப்பார்.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் சட்டமன்றத்தில் உரையாற்ற வருமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியை பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (3.1.2025) நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் உடன் இருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *