28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரி நியமன அவசர சட்டம் ஆளுநர் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிவைப்பு

viduthalai
2 Min Read

சென்னை, ஜன.2 தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புக ளுக்கு தனி அதிகாரியை நியமித்து அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்காக, ஆளுநரின் ஒப்புதலை பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடத்த 2019-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. 2019-ம் ஆண்டில் சில மாவட் டங்கள் பிரிக்கப்பட்டு9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப் பட்டன. அதனால் 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட் டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது.

இந்தநிலையில் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் வருகிற ஜன.5-ஆம் தேதியன்று நிறை வடைகிறது என்று அரசு அறிவித்துள்ளது. மேலும், அந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புறத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை, அருகில் உள்ள மாநகராட்சிகள் அல்லது நகராட்சிகளுடன் இணைக்கவும், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி கனை இணைத்து நகராட்சியாக அமைக்கவும், உள்ளாட்சி அமைப்புகளில் மறு சீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

தனி அதிகாரி

மறு சீரமைப்புப்பணி கள் நடைபெற இருப் பதால் அந்த இடங்களில் தனி அதிகாரிகளை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனிடையே வருகிற 6-ஆம் தேதி சட்டமன்றம் கூடுகிறது. முதல் நாளில் ஆளுநர் உரையும், 7ஆம் தேதி ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் அவை ஒத்திவைக்கப்படும். எனவே உள்ளூராட்சி களில் தனி அதிகாரி நியமிப்பதற்கான சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய முடியாது. எனவே, 5-ஆம் தேதி காலி யான அந்தப் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்க தேவையான அவசர சட்டத்தை பிறப்பிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காகதனி அதி காரிகளின் பதவிக்கால் அளவை குறிப்பிட்டு அதற்கான கோப்புகளை ஆ:ளுநர் ஆர். என்.ரவியின் ஒப்புதலைப் பெற அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததும் அந்த அவசரச் சட்டம் நடைமுறைக்கு வரும். அதன் பிறகு அந்த அவசர ச்சட்டம் சட்டமன்றத்தில் (7-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். அந்த மசோதா. சட்டமன்ற உறுப்பினர் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும். ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாக நிறைவேற்றப்படும். அந்த சட்டத்தில் குறிப்பி டப்பட்டுள்ள கால அளவிற்கு தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீடிக்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *