தஞ்சாவூர்,ஜன.2-வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின்) சார்பில் 29.12.2024 காலை 9.30.மணியளவில் தஞ்சாவூர் அறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபம் “வெற்றிப் பாதை “தேர்வை வெல்லுவோம்! வெற்றி வாகை சூடுவோம்! என்ற மய்யம் பொருண்மையில் விழா நடைபெற்றது.
நான் முதல்வன் திட்டம்
இவ்விழாவில் வெற்றிப் பாதைக் குறித்து முதல் அமர்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.அண்ணாதுரை கலந்துகொண்டு பேசுகையில் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே முக்கியமல்ல. உழைக்க கற்றுக்கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் கதைகளை கேட்டறிந்து ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக சமூகத்தில் வளர்ந்து தங்களுடைய கல்வித் தரத்தை மேம்படுத்திக் கொடுத்துக்கொள்ளவும் மாணவர்கள் நன்கு படித்து முன்னேற வேண்டும் என்ற செய்தியை துவக்கவுரையில் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் மேம்பாட்டிற்கு அரசு பல நல்ல திட்டங்களை கொடுத்துவருகிறது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வழியாக மாணவர்கள் பயன்பெற்று வாழ்க்கை கல்விப் பயணத்தை துவங்க வேண்டும் என்று தன்னுடைய துவக்கவுரையில் குறிப்பிட்டார். வெற்றிப் பாதை அமர்வில் மாவட்ட கல்வி அலுவலர் இ.மாதவன் கலந்துகொண்டு மாணவர்கள் தன்னம்பிக்கையோடு தங்களுடைய வாழ்க்கை பயணத்தை துவங்க வேண்டும். பொருளறிந்து படிக்க வேண்டுமென்று கருத்துரை வழங்கினார்.
தேர்வும் – தெளிவும்
அமர்வு 2 தேர்வும் தெளிவும் என்ற பொருண்மையில் முதுகலை ஆசிரியர் எம்.வி.ஆம்ஸ்டாரங் மாணவர்களுக்கு வேதியில், இயற்பியல் தொடர்பான பாடத் திட்டங்கள் தொடர்பான பாடத்திட்ட கருத்துகளை விளக்கி கூறியதோடு அதில் காணப்படும் சிக்கல்களை மாணவர்கள் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கி கூறினார்.
மேலும் எ.நடராஜன் தலைமையாசிரியர் மாணவர்கள் தேர்வை எப்படி எதிர்கொள்வது +2 படிக்கும் மாணவர்கள் பாடத் திட்டங்களை புரிந்து இயற்பியல் தொடர்பான வினை மாற்றங்களை கற்றுக்கொண்டு தன்னம்பிக்கையோடு மாணவர்கள் நன்கு படித்து முன்னேற வேண்டும் என்று கருத்துகளை பதிவு செய்தார். மேலும், முதுகலை ஆசிரியர் பேரா. குமரன் உயிரியல் சார்ந்த பாடகுறிப்பினை மாணவர்களுக்கு தேர்வும் தெளிவும் என்ற பொருண்மையில் பேசிய பாடத்திட்ட வல்லுநர்களின் நான்கு வினாக்களுக்கு சிறப்பாக பதிலளித்த மாணவ மாணவிகளுக்கு விழா மேடையில் பரிசு வழங்கப்பட்டது.
அமர்வு 3இல் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் என்ற பொருண்மையில் எழுத்தாளர் கவிஞர் நந்தலாலா கலந்துகொண்டு பேசுகையில் பெரியாரின் பெண்ணுரிமையின் சிந்தனைகள் நமக்கு தேவையான ஒன்றாகும். அறிவார்ந்த சமூகத்தை மாணவர்களால் மட்டுமே உருவாக்க முடியும். அதற்கு தன்னம்பிக்கை அவசியமான ஒன்றாகும் என்ற கருத்தை ‘அசுரன்’ படம் மற்றும் பட்டுக்கோட்டையார், கண்ணதாசனின் மேற் கோள்களை மய்யப்படுத்தி கருத்துகளை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், உழைப்புக்கு வெற்றி அவசியம், அந்த வெற்றிகள் பாட்டாளி மக்களிடத் திலிருந்து கிடைக்கிறது என்ற கருத்தையும் பெரியாரின் வாழ்வியல் சிந்தனையோடு ஒப்பிட்டு சில குட்டி கதை களோடும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
அறிவியல் சிந்தனையுள்ள…
அமர்வு நான்கு கனவு மெய்ப்பட வேண்டும் என்ற தலைப்பில் பேராசிரியர் செந்தமிழ்குமார் கலந்துகொண்டு பேசுகையில் மாணவர்கள் நல்ல ஊட்டமிக்க உணவுகளை உண்ண வேண்டும். தன்னம்பிக்கையோடு அப்துல்கலாம் கூறிய ‘கனவுகள் மெய்யப்பட வேண்டும்’ என்ற கருத்தையும் மேற்கோளிட்டு அறிவியல் சிந்தனையுள்ள பிள்ளைகளாக வளர வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்தார்.
இவ்விழாவில் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வெ.இராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவியல்பூர்வமான கருத்துரைகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். பதிவாளர் பி.கே.சிறீவித்யா கலந்து கொண்டு வாழத்துரை வழங்கினார். முனைவர் தி.கிருட்டிணகுமார் உதவி இயக்குநர் மாணவர் சேர்க்கை வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில் சுமார் 300 மேற்பட்ட +1, +2 மாணவர்கள் கலந்துெக்ாண்டு தங்களுக்கு ஏற்பட்ட அய்யங்களை கேட்டு பெற்றனர். இது மட்டுமல்லாமல் மேலும் மாணவர்களுக்கு கண்ணை கவரும் விதத்தில் அறிவியல் சார்ந்த பல கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மிகுந்த விழாவினை வெற்றிப்பாதை ஒருங்கிணைப்பின் பேராசிரியப் பெருமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
மாணவர் சேர்க்கை இயக்குநர் முனைவர் எம்.சர்மிளாபேகம் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வை சிறப்பாக மொழிகள் துறை முனைவர் ந.லெனின் தொகுத்து வழங்கினார்.
கும்பகோணம்,ஜன.2- கும்பகோணம் ஏ.எம்.திருமண மண்டபத்தில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் ‘வெற்றிப்பாதை’ நிகழ்ச்சி, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேராசிரியர் நர்மதா வரவேற்புரை ஆற்றினார். தஞ்சாவூர் பயிற்சி துணை ஆட்சியர் சங்கர நாராயணன் இந்நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்ட ஊராட்சி கவுன்சில் துணைத்தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தர், அறிவுசார் மய்யத்தின் மதியுரைஞர் சுகுமாறன் ஆகியோர் வெற்றிப்பாதை என்னும் தலைப்பிலும் தலைமையாசிரியர் கல்யாணசுந்தரம், ஆசிரியர் குருநாதன் ஆகியோர் தேர்வு தெளிவும் என்னும் தலைப்பிலும், கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் என்னும் தலைப்பில் தன்னம்பிக்கைப் பேச்சாளர் சாத்தமைப்பிரியாவும், கனவு மெய்ப்பட வேண்டும் என்னும் தலைப்பில் பேராசிரியர் செல்வகுமாரும் உரையாற்றினர். வெற்றிப்பாதை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துராமன் நன்றியுரை ஆற்றினார்.
ஆசிரியர் கலியமூர்த்தி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அவர்தம் பெற்றோருடன் திரளாகக் கலந்துகொண்டு பொதுத்தேர்வு மற்றும் உயர்கல்வி குறித்த ஆலோசனைகளைப் பெற்றுப் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா பகாங் மாநிலம் தெளிமொங், ரெஞ்சோக், புடு தோட்டங்களை சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் மாணவர்களுக்கு தந்தை பெரியார், கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் தன்முனைப்பு கட்டுரைகள் அடங்கிய நூல்கள் மற்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “தவறின்றித் தமிழ் எழுத” நூல்களை மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் மு.கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்.