சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

சோழிங்கநல்லூர், ஜன. 2- 21.12.2024 அன்று சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு தலை மையில் மாவட்ட காப் பாளர் நீலாங்கரை
ஆர்.டி.வீரபத்திரன் முன்னி லையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நமது விடுதலை நகர் படிப்பக்கத்தில் முன்பு தந்தை பெரியார் அவர்களின் சிலையை நிறுவுவது மற்றும் ஆசிரி யரை அழைத்து வெகு சிறப்பாக கூட்டம் நடத்துவது என்று ஏற்கனவே முடிவு எடுத்திருந்தாலும் சில ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மாவட்ட தோழர்கள் அளித்தார்கள் செயல்படுத் துவோம் என்று முடி வெடுத்துள்ளோம்.

பங்கேற்றோர்
கூட்டத்தில் துணைத் தலைவர் தமிழினியன், மாவட்ட செயலாளர் விஜய் உத்தமன்ராஜ், பி.சி.ஜெயராமன் ப.க. அமைப்பாளர், த.ஆனந் தன் ப.க. தலைவர், குகா.ஆனந்தராஜ் துணை செயலாளர், நித்தியா னந்தம் இளைஞர் அணி தலைவர், ஆற்காடு திவாகரன், ராஜேந்திரன் நீலாங்கரை, வெற்றி வீரன் மேடவாக்கம், சரவணகுமார் விமான நிலையம் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *