மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் திறந்து வைத்தார்

1 Min Read

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (2.1.2025) வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சென்னை, கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நான்காவது சென்னை மலர் காட்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, மரு. நா. எழிலன், துணை மேயர் மு.மகேஷ் குமார், நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் செல்வி அபூர்வா, வேளாண்மைத் துறை இயக்குநர் பி. முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *