தமிழ்நாட்டில் 1.77 கோடி பேருக்கு இலவச வேட்டி சேலை அமைச்சர் காந்தி தகவல்

Viduthalai
2 Min Read

திருப்​பதி,ஜன.1- பொங்கல் திருநாளுக்கு தமிழ்நாட்டில் 1.77 கோடி பேருக்கு வருகிற ஜனவரி 10ஆம் தேதிக்​குள் இலவச வேட்டி மற்றும் சேலைகள் விநி​யோகம் செய்யப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி தெரி​வித்​தார்.
வேட்டி, சேலை
திருப்பதி காந்தி ரோட்​டில் புதுப்​பிக்கப்பட்ட கோ-ஆப் டெக்ஸ் கைத்தறி விற்பனை நிலையத்தை நேற்று தமிழ்​நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்​துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசி​யதாவது: தமிழ்நாடு அரசின் கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்​லாது நமது அண்டை மாநிலங்​களில் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்​ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 150 விற்பனை நிலையங்கள் உள்ளன. இது தவிர ஆந்திரா​வில் 8 மற்றும் தெலங்​கானா​வில் 3 விற்பனை நிலையங்களும் உள்ளன. இவை காலத்​திற்கு ஏற்ப புதுப்​பிக்​கப்​பட்டு வருகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வரும்​போது, கோ-ஆப்​டெக்ஸ் மிகவும் நட்டத்தில் இயங்கி வந்தது. இதனை லாபகரமாக கொண்டு செல்லவே தற்போது புதுப்​பிக்​கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காலத்​திற்கு ஏற்ப தற்கால இளைஞர்களை கவரும் விதத்​தில் டிசைன்கள் செய்து விற்பனை செய்​யப்​படு​கின்றன.
பொங்கல் திருநாளுக்காக 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 22 லட்சம் வேட்டிகளும் தயாரித்து விநி​யோகம் செய்​யும் பணிகள் மும்​முரமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 51 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. வரும் ஜனவரி 10ஆம் தேதிக்​குள் தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச சேலைகள் மற்றும் வேட்​டிகள் விநி​யோகம் செய்யப்​படும். யாருமே எங்களுக்கு கிடைக்கவில்லை என குறைகூறாத வகையில் அவை ரேசன் கடைகள் மூலம் விநி​யோகம் செய்​யப்​படும். இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

வரும் கல்வி ஆண்டில் புதிய அய்டிஅய் தொடங்க விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு!
சென்னை,ஜன.1- வரும் கல்வி ஆண்டில் புதிய அய்டிஅய் தொடங்கவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கவும் நாளை (ஜன.2) முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பி.விஷ்ணு சந்திரன் நேற்று (31.12.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025-2026-ம் கல்வியாண்டில் புதிய தொழிற்பயிற்சி பள்ளிகள் (அய்டிஅய்) தொடங்குதல், அங்கீகாரத்தை புதுப்பித்தல், புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஜனவரி 2ஆம் தேதி முதல் ஆன்லைனில் (www.skilltraining.tn.gov.in) விண்ணப்பிக்கலாம்.

2025-2026ஆம் கல்வியாண்டுக்கு அங்கீகாரம் பெற ஒரு இணைய வழியில் விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5,000. ஆய்வு கட்டணம் ரூ.8,000. இக்கட்டணங்களை இணைய வழியில் செலுத்த வேண்டும்.
இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.28ஆம் தேதி ஆகும். கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகளை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும் 044-22501006 (113) என்ற தொலைபேசி எண்ணிலும் detischennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொண்டு விவரம் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *