வரலாறு படைத்த வைக்கத்தைப் பாருங்கள்
வந்து பார்த்து மகிழுங்கள்
வைக்கம் போகாமல் இருப்போமா? – பெரியார்
வழியில் நடக்க மறப்போமா?
ஒரு நூற்றாண்டு கடந்த பின்னும் – நெஞ்சில்
ஒவ்வொரு நொடியும் நினைவில் மின்னும் வைக்கம்
ஈரோட்டில் இருந்து சென்றாரே – இழிவு
ஒழிப்புப் போரினில் வென்றாரே
தீண்டாமைப் பாம்பை அடித்தாரே – நம்மை
தெருவினில் நடக்க வைத்தாரே
வெஞ்சிறைத் தீயினில் குளித்தாரே – அன்னை
நாகம்மையைப் போரில் இணைத்தாரே
அஞ்சாமல் அயராமல் உழைத்தாரே – தன்
அரும்பணியால் வெற்றிகுவித்தாரே
நன்றி ஆயிரம் சூட்டுகின்றோம் – தமிழ்
நாட்டு அரசைப் போற்றுகின்றோம்
நன்றிப் பாயிரம் பாடுகின்றோம்
கேரள அரசையும் வாழ்த்துகின்றோம்.
29.12.2024 அன்று திருச்சியில் நடைபெற்ற ஃபெரா மாநாட்டில் பாடப்பட்ட பாடல் – உடனே எழுதப்பட்டு, உடனே பாடவும் பட்டது.
வைக்கம் போகாமல் இருப்போமா?

Leave a Comment