31.12.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இந்தியாவிலேயே முதல் முறையாக கன்னியாகுமரி கடலில் கண்ணாடி பாலம்: வள்ளுவர் சிலை-விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* தூத்துக்குடியில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் துவக்க விழா; 75000 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். உயர் கல்வியில் தமிழ்நாட்டு பெண்கள் தான் ‘டாப்’: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரி விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்; பஞ்சாப் – டில்லி சாலை போக்குவரத்து பாதிப்பு.
* நீதிபதிகள் உறவினர்களை நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரைப்பதில் உயர்நீதிமன்றத்திற்கு கட்டுப்பாடு விதிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஆலோசனை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மந்தமான பொருளாதாரம், கடன்கள் காரணமாக ஏப்ரல்-ஜூன் மாதங்களில் தங்கக் கடன் திரும்ப செலுத்துவதில் சிக்கல்; வாராக்கடன் (NPA) 30% அதிகரித்துள்ளது
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குஜராத்தின் ராஜ்கோட்டில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட லட்சிய லைட் ஹவுஸ் திட்டம் சிதிலம் அடைந்துள்ளது. ‘சுவர்களில் விரிசல், மேலோடு உரிகிறது…’
* புதிதாக அமைக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களை பஜன் லால் அரசாங்கம் ரத்து செய்ததால், ராஜஸ் தானில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளது. காங்கிரஸ் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பீகார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 13ஆம் தேதி நடத்திய தேர்வில் வினாத்தாள் முன் கூட்டியே கசிந்ததாகவும், விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததால் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவர்கள் மாநிலம் முழுவதும் கடந்த 2 வாரமாக போராட்டம்.
* அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை வழக்கு: ‘தொழில்நுட்பக் கோளாறால்’ எப்அய்ஆர் கசிந்ததாக தேசிய தகவல் மய்யம் (என்அய்சி) தெரிவித்துள்ளது
.
– குடந்தை கருணா