இது என்ன தொடர் விபரீதம்?

1 Min Read

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்

ராமேசுவரம், ஜூலை 20- ராமேசு வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் வலைகளை கடலில் வெட்டி வீசியதால், அவர் கள் கரை திரும்பினர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசு வரத்திலிருந்து 16.7.2023 அன்று 150க்கும் மேற்பட்ட விசைப் படகு களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக் கச் சென்றனர்.

இந்த நிலையில், 16.7.2023 அன்று நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டிய டித்தனர். 

மேலும், 20-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் இருந்த மீன் பிடி வலைகளை கடலில் வெட்டி வீசினர். இதனால், பல்லாயிரம் ரூபாய் இழப்புடன் மீனவர்கள் 17.7.2023இல் கரை திரும்பினர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறு கையில், இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதல், கைது நடவடிக்கைகளை நிறுத்திட, அந்த நாட்டுடன் ஒன்றிய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *