நினைவகம் கட்டும் இடத்தில் இறுதி நிகழ்வை அனுமதிக்காதது மன்மோகன் சிங்கின் பங்களிப்பை அவமதிக்கும் செயல்

Viduthalai
1 Min Read

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

சென்னை, டிச.29 நினைவகம் கட்டும் இடத்தில், இறுதி நிகழ்வை நடத்த கோரியதை பாஜக அரசு நிராகரித்தது, மன்மோகன் சிங்கின் உயர்ந்த தொண்டை நேரடியாகவே அவமதிக்கும் செயல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அவமதிக்கும் செயல்
இதுகுறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (28.12.2024) வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: மேனாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் குடும் பத்தார் அவருக்கு நினைவகம் கட்டுவதற்குரிய இடத்தில் அவரது இறுதி மரியாதைகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியதை பாஜக அரசு நிராகரித்துள்ளது. இது அவரது உயர்ந்த தொண்டையும், அவரது சீக்கிய சமூகத்தையும் நேரடியாகவே அவமதிக்கும் செயலாகும்.

அவரது குடும்பத்தார் வைத்த கோரிக்கையை மறுத்து, இரு முறை பிரதமராக இருந்த தலைவரின் இறுதி நிகழ்வைச் சாதாரணமாக நிகம்போத் காட்-இல் வைத்து நடத்தியிருப்பது, ஒன்றிய பாஜக அரசின் ஆணவத்தையும், பாரபட்சத்தையும் காட்டுகிறது. இது அவரது பெரும் பங்களிப்புகளை மக்களின் நினைவில் இருந்து அகற்ற முனையும் அப்பட்டமான முயற்சியாகும். மன்மோகன் சிங்கின் தலைமை இந்தியாவின் பொருளா தாரத்தை மாற்றியமைத்துக் கோடிக் கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்தது. இத்தகைய உயர்ந்த தலைவரை அவமதிப்பது என்பது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதற்குச் சமமாகும். பெருந்தலைவர்களை அவமதிக்கும் கறை வரலாற்றில் இருந்து என்றும் மறையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *