இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் முதல் நாள் மாட்சிகள்– காட்சிகள்

1 Min Read

திருச்சி, டிச.29 திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் இரண்டு நாள்களாக – டிசம்பர் 28, 29இல் (சனி – ஞாயிறு) இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆம் தேசிய மாநாட்டை, தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகம் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.
நேற்று (டிசம்பர் 28) மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடந்தேறின. தொடக்க விழாவில் திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

தமிழர் தலைவருக்கு விருது
தொடக்க விழாவில் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு, தெலங்கானா மானவ விகாச வேதிகா – பகுத்தறிவாளர் அமைப்பின் சார்பாக 2024 ஆம் ஆண்டுக்கான ‘தேசிய மனிதநேயர் விருது’ வழங்கப்பட்டது. விருதுப் பட்டயத்துடன் ரூ.10,000த்துக்கான விருதுத் தொகையினை மானவ விகாச வேதிகா அமைப்பின் தலைவர் பி.சாம்பசிவராவ் மற்றும் பொறுப்பாளர்கள் சேர்ந்து ஆசிரியர்
கி.வீரமணி அவர்களுக்கு வழங்கினர்.

விருதுத் தொகையினை தமிழர் தலைவர்
‘பெரியார் உலகத்திற்கு’ வழங்கினார்
விருதுத் தொகை ரூ.10,000–க்கான காசோலையினை திருச்சி – சிறுகனூரில் அமைக்கப்பட்டு வரும் ‘பெரியார் உலகத்திற்கு’ தமிழர் தலைவர் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *