மறைந்த லால்குடி முத்துச்செழியனுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்!

1 Min Read

திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழகம் என நமது இயக்கத்தில் ஈடுபாட்டுடன் பல ஆண்டு காலம் உழைத்தவரும், தொடர்ந்து லால்குடி பகுதியில் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பணிகளில் ஈடுபட்டு வந்தவரும் பின்னர் சொந்தக் காரணங்களால் ஒதுங்கிக் கொண்டவருமான நண்பர் லால்குடி முத்துச்செழியன் பி.ஏ. (வயது 93) அவர்கள் இன்று (27.12.2024) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்; அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் தண்டிக்கப்பட்டுச் சிறையேகியவர்.
அவரது துணைவியார், மகன், மகள்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *