கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

27.12.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு, தென்னக மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத தொகுதி வரையறை குறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் முன்மொழிந்த தீர்மானங்களை காங்கிரஸ் மத்திய காரிய கமிட்டி ஏற்றது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘டில்லியில் ஆட்சியில் இருப்பவர்களால் காந்தியாரின் மரபு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது’: காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஆகியவற்றிற்கு சோனியா காந்தி கடும் கண்டனம்
தி டெலிகிராப்:
* உ.பி., இடைத்தேர்தல்: தோல்வியடைந்த 6 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை தர வேண்டும், தேர்தல் ஆணையத்திடம் சமாஜ்வாடி கட்சி வேண்டுகோள்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்த ஆண்டின் முதல் பாதியில் வங்கிகளில் நடைபெற்ற பண மோசடிகள் எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட தொகை கடந்த ஆண்டு ரூ.2,623 கோடியில் இருந்து 21,367 கோடியாக உயர்ந்துள்ளது.

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *