சென்னை, ஜூலை 21 – தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் தொடர் பாக தனியார்பல்கலைகளின் துணைவேந்தர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு ஆளுநரான ஆர். என்.ரவி, மாநிலப் பல்கலைக் கழ கங்களின் வேந்தர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். இதற்கிடையே உயர்கல்வி வளர்ச்சி குறித்து ஆளு நர் ரவி, பல்கலை. துணைவேந்தர் களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். சமீபத்தில் மாநில பல்கலை.களின் துணை வேந்தர்களுடன் உதகையில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தேசிய கல்விக் கொள்கை, காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற அம்சங்கள் குறித்து ஆளுநர் ரவி கலந்துரை யாடினார்.
அதன் தொடர்ச்சியாக, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் நிறு வன பிரதிநிதிகளுடனான ஆலோ சனைக் கூட்டம் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் நேற்று (20.7.2023) நடைபெற்றது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இதில் மாநி லம் முழுவதும் உள்ள பல்வேறு தனியார் பல்கலை.களின் துணை வேந்தர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்கலை.களில் தேசிய கல்விக் கொள்கையை அமல் செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை பல்கலைக்கழ கங்கள் விரைவாக நடைமுறைப் படுத்தி, ஆராய்ச்சி பணிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் அறிவுறுத்தப் பட்டதாகக் கூறப் படுகிறது. மறுபுறம் தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்துக்கென தனிக்கொள் கையை தமிழ்நாடு அரசு வடிவ மைத்து வருகிறது.
எனினும், தொடர்ச்சியாக பல் கலை. துணைவேந்தர்களுடன் ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.