புதியதாக தந்தை பெரியார் பெயருடன் கூடிய
வேலூர் மாவட்ட மய்ய நூலக பெயர்ப் பலகை!
வேலூரில் உள்ள மாவட்ட மய்ய நூலகம் ‘‘வேலூர் மாவட்ட தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி மய்ய நூலகம்’’ என்ற பெயர் பலகையின்றி காட்சியளிக்கிறது என்று கடந்த 30.11.2024 நாளிட்ட ‘விடுதலை’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதன் எதிரொலியாக இப்போது பெயர்ப் பலகையை புதியதாக பொலிவுடன் வைத்துள்ளனர். பெயர்ப் பலகையை வைத்த தமிழ்நாடு அரசின் பொது நூலகத் துறை மற்றும் வேலூர் மாவட்ட நூலக ஆணைக் குழுவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.