ஈரோடு – கோபிசெட்டிபாளையம் நிகழ்ச்சிகளில் தமிழர் தலைவர்….

2 Min Read

பெரியார் பெருந்தொண்டர் இரா. சீனிவாசன் 89ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இரா.சீனிவாசன் – பத்மாவதி இணையருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். குடும்பத்தினர் தமிழ்செல்வி, கந்தசாமி, கவிதா தன்ராஜ், மதிவாணன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். (கோபிசெட்டிபாளையம், 25.12.2024)

திராவிடர் கழகம்

வைக்கம் வெற்றி முழக்கம் தமிழ்நாடு கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி நல்கும் வகையில் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர், தமிழ்நாடு வணிக நல வாரிய உறுப்பினர் கே கே செல்வன் அவர்கள் தலைமையில் 1000 மரக்கன்றுகள் வழங்கும் விழா கோபிசெட்டிபாளையம் சீதா கல்யாண மண்டபம் முன்பு நடைபெற்றது. இதில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என் .நல்லசிவம் மற்றும் கோபி நகர மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ், திராவிடர் கழக கோபி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு. சென்னியப்பன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் மரக்கன்று வழங்கி தொடங்கி வைத்தார். மற்றும் திராவிடர் கழக தோழர்கள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (25.12.2024)

திராவிடர் கழகம்

ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், கோபி மணிமாறன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வேங்கடாசலம் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தனர்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழக கோபிசெட்டிபாளையம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் நம்பியூர் மு.சென்னியப்பனின் மனிதம் சட்ட உதவி மய்ய அலுவலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மாணமிகு கி.வீரமணி அவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி துறை அமைச்சர் மாண்புமிகு ஈரோடு முத்துசாமி ஆகியோர் வருகை தந்தனர் வழக்குரைஞர் மு. சென்னியப்பன் அவரது வாழ்வினணயர் திலகவதி மற்றும் வழக்குரைஞர்கள் அலுவலகப் பணியாளர்கள் உடன் குழு படம் எடுத்துக் கொண்டனர் (25-12-2024)

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

ஈரோட்டில் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். (25.12.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *