பகுத்தறிவாளர் சிந்தை மு. இராசேந்திரன் மறைவுக்கு வருந்துகிறோம்

1 Min Read

சீரிய பகுத்தறிவாள ரும், பெரியார் வழி நாளும் நடை போடுபவரும், மத்தூர் கலைமகள் மெட்ரிக் மேனிலைப் பள்ளி தாளாளரும், தனது பள்ளி வளாகத்திலேயே தந்தை பெரியார் சிலை, பெரியார் கலையரங்கம் நிறுவியவரும், நமது இயக்கத்துக்கு உறுதுணையாக இருந்தவருமான சிந்தை
மு. இராசேந்திரன் நேற்று (25.12.2024) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்.
அவர் நிறுவிய கல்வி நிறுவனத்தில் பல முறை உரையாற்றியுள்ளோம்.
அவர் மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; பகுத்தறிவு இயக்கத்திற்கும் மிகப் பெரிய இழப்பாகும்.
‘அவர் பிரிவால் ஆறாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பெரியார் வாசகர் வட்டத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியறிந்து அவரது வாழ்விணையர் பாரதி, மகள் அமுதினி ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *