நெகிழியை உண்ணும் நிலப் புழுக்கள்

1 Min Read

மைக்ரோ பிளாஸ்டிக் எனும் நுண்நெகிழிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்துகள் பற்றி நாள்தோறும் ஆய்வுகள் வெளிவந்தபடி உள்ளன. இவற்றை நிரந்தரமாக அழிக்க விஞ்ஞானிகள் புது வழிகளைக் கண்டறிந்து வருகின்றனர். கனடாவைச் சேர்ந்த பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உணவுப் புழுக்களை (Mealworms) கொண்டு, பிளாஸ்டிக்குகளை அழிக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.

இந்தப் புழுக்கள் இயற்கையில் இறந்த உயிரினங்களை உண்டு வாழ்பவை. 8 மாதங்கள் கூட இவற்றால் உணவு, தண்ணீர் இல்லாமல் வாழ முடியும். உணவு கிடைக்காதபோது கிடைக்கின்ற எந்தப் பொருளையும் இவற்றால் உண்டு வாழ முடியும்.

எனவே இவற்றை 30 நாட்கள் பட்டினி போட்டுப் பின்னர் நுண்நெகிழிகளை உணவாக இட்டனர். புழுக்கள் அவற்றை உட்கொண்டன. உண்ட நெகிழிகளில் மிகக் குறைந்த அளவே கழிவுகளாக வெளிவந்தன. நெகிழிகளை உட்கொண்டதால் அவற்றின் உடல் செயல்பாடுகள் பாதிப்படையவில்லை. விவசாய நிலத்தில் பூச்சிக் கொல்லிகளைப் போட்டு இந்தப் புழுக்களைக் கொன்று வருகிறோம். அதற்குப் பதிலாக இவற்றைப் பிடித்து வந்து நுண்நெகிழிகளை அழிக்கப் பயன்படுத்தலாம். இதன் வாயிலாக இயற்கையைக் காக்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *