அதிமுகவின் நிறுவனத் தலைவரும், கலைத்துறையான சினிமா, நாடகத் துறையில் தனி வரலாறு படைத்தவருமான மேனாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களது 37ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (24.12.2024).
அவரது ஆட்சியில் தந்தை பெரியார் நூற்றாண்டை சிறப்பாக நடத்தியதுடன் – தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தினை – தமிழ்நாடு அரசு ஏற்று தனி அரசாணை பிறப்பித்தார்! அரசியலில் தான் எடுத்த முடிவுகளைக்கூட தவறு என்று சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளக் கூடிய அரிய பண்புடையவர். புகழுடன் இன்றும் அவர் வாழ்கிறார்.
அவரது நினைவு போற்றத்தக்கதாகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.12.2024