நூறாண்டு காணும் ‘‘தகைசால் தமிழர்’’ தோழர் நல்லகண்ணுக்கு கழகத் தலைவர் வாழ்த்து

1 Min Read

பேரன்புடையீர், வணக்கம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டில் அப்பழுக்கற்ற பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான – தமிழ்நாடு அரசால் “தகைசால் தமிழர்” என்ற பெருமைக்குரிய தாங்கள் நூற்றாண்டு காண்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் நேரில் வந்து தங்களை வாழ்த்த முடியாத நிலைக்கு வருந்துகிறேன்.
பொதுவுடைமை இயக்கத்தில் தாங்கள் கடந்து வந்தது மலர் பரப்பப்பட்ட பாதையல்ல – கல்லும் முள்ளும் கனலும் நிறைந்த கரடுமுரடான காட்டாற்றுப் பாதை.
தலைமறைவான வாழ்க்கை – சித்திரவதைக்கு ஆளான சிறை வாழ்க்கை என்று விரிந்து கொண்டே போகும்! கட்சிகளைக் கடந்து தமிழ்நாட்டில் வாழும் மூத்த தலைவரான தாங்கள் நல்ல உடல் நலத்துடன், மேலும் நீண்ட காலம் வாழ்ந்து கட்சிக்கும் நாட்டுக்கும் வழி காட்ட வேண்டும் என்று உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்!
தங்கள்

(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *