எண்ணூரில் 2000 மெகாவாட் திறன் எரிவாயு மின்நிலையம் அமைக்க திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

1 Min Read

சென்னை,நவ.16- தமிழ்நாடு மின்வாரியத்துக்கு எண்ணூரில் 450 மெகாவாட் திறனில் அனல்மின் நிலையம் இருந்தது. இதன் ஆயுட் காலம் முடிவடைந் ததால் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நிரந்தரமாக மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது.

புதிதாக 2 ஆயிரம் மெகாவாட் திறனில் எரிவாயு மின்நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது.

மேலும், மின்நிலையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிதனியார் நிறுவனத்திடம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அந் நிறுவனம் கடந்த மார்ச் மாதம்திட்ட வரைவு அறிக் கையைச் சமர்ப்பித்தது.

அறிக்கையில் இடம் பெற்றிருந்த மின்னுற்பத்தி செலவு உள்ளிட்டவை தொடர்பாக மின்வாரியம் பல விளக்கங்களைக் கேட்டது. அதற்கு ஏற்ப கூடுதல் விவரங்களுடன் கூடிய இறுதி விரிவான திட்ட அறிக்கை மின்வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந் நிலையில், இம்மாத இறுதியில் மின்வாரிய இயக்குநர்கள் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், மின்நிலைய திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் தமிழக அரசின் அனுமதி பெறப்படும். பிறகு, கட்டு மானப் பணிகள் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்துக்குள் தொடங்கி 2 ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிடப் பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *