கேரளாவில் இருந்து நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்

2 Min Read

நெல்லை, டிச. 23- கேரளாவில் இருந்து நெல்லையில் 6 இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் நேற்று (22.12.2024) அகற்றப்பட்டு, 16 லாரிகளில் மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்லப்பட்டது.

நெல்லை நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் புற்றுநோய் மருத்துவமனையின் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சுத்தமல்லியைச் சேர்ந்த மனோகர், பேட்டையைச் சேர்ந்த மாயாண்டி, சேலம் ஓமலூரைச் சேர்ந்த சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்லதுரை, கேரள கழிவு மேலாண்மை அலுவலர் நிதிஷ் ஜார்ஜ் ஆகியோரை கைது செய்தனர்.

பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

இதற்கிடையே, மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, நெல்லையில் 6 இடங்களில் கொட்டப்பட்ட கேரளக் கழிவுகளை அகற்றும் பணி நேற்று காலை தொடங்கியது. திருவனந்தபுரம் சார் ஆட்சியர் சாச்சி, கேரள சுகாதாரத் துறை அலுவலர் கோபகுமார் உள்ளிட்டோர் தலைமையிலான அதிகாரிகள் நெல்லை வந்தனர்.

அகற்றம்

சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், பயிற்சி ஆட்சியர் அம்பிகா ஜெயின் ஆகியோர் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து கழிவு அகற்றும் பணியை ஆய்வு செய்தனர். இலந்தைகுளம், பழவூர், பாரதி நகர், கொண்டாநகரம், நடுக்கல்லூர், கோடகநல்லூர் ஆகிய 6 இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றி, 16 லாரிகளில் ஏற்றி, கேரளாவுக்கு கொண்டுசெல்லும் பணி தொடங்கியது.

கேரள அரசு தாக்கீது

இதுகுறித்து கேரள சுகாதார அலுவலர் கோபகுமார் கூறும்போது, “மருத்துவக் கழிவுகளை 16 லாரிகளில் ஏற்றி, அப்புறப்படுத்தி வருகிறோம். கேரளாவில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70 அதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கழிவை அகற்றுவதற்கு தமிழ்நாடு காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் முழு ஒத்துழைப்பு அளித்தனர். இதனால் மாலைக்குள் முழுவதுமாக கழிவு அகற்றும் பணி நிறைவடையும். கேரளாவில் உள்ள மருத்துவக் கழிவை அகற்றும் 3 நிறுவனங்களுக்கு இது தொடர்பாக அரசு சார்பில் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து விளக்கம் கிடைக்கப்பெற்ற பின்னர், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *