திருவண்ணாமலை அருகே கடவுளர் சிலைகள் பறிமுதல்

viduthalai
0 Min Read

திருவண்ணாமலை, டிச.23- திருவண்ணாமலையில் ரூ.25 கோடி மதிப்புள்ள நவபாஷாண முருகன் சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நவபாஷாண முருகன் சில 10 கிலோ எடை கொண்டது என தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், ரூ.35 லட்சம் மதிப்பிலான ஒரு அடி உயரம் கொண்ட யானை தந்தத்தினால் செய்யப்பட்ட கிருஷ்ணன் சிலையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு சிலைகளையும் ஒன்றிய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சிலையை கடத்தி வந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *