அய்யம்பேட்டை சாவடி பஜாரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா

1 Min Read

 பாபநாசம், ஜூலை 21 – வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் விளக்க தொடர் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் பாபநாசம் ஒன்றியம் அய்யம்பேட்டை சாவடி பஜாரில்  8.7.2023  அன்று மாலை  நடைபெற்றது. அய்யம் பேட்டை நகர கழகத்தின் செயலாளர் வை. அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் வ. அழகுவேல்,  அய்யம் பேட்டை நகர தலைவர் வெ.  இராவணன், சூலமங் கலம் ச. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கை.ராசராசன் வரவேற்று பேசினார். மாவட்ட அமைப் பாளர் வ.அழகுவேல், மாவட்ட செயலாளர் சு.துரைராசு,  பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் க. திருஞான சம்பந்தம், ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினார்கள்.

ஒன்றிய துணைச் செயலாளர் க. ஜனார்த்தனன், மாத்தூர் சுதாகர், பாபநாசம் நகர தலைவர் வெ. இளங்கோவன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் கோவி. பெரியார் கண்ணன், ஒன்றிய அமைப்பாளர் கை. ராஜராஜன், கோபிநாதன், அய்யம்பேட்டை சதாசிவம், மாகாளிபுரம் சைவராஜ், ஒன்றிய துணை செயலாளர் க.ஜனார்த்தனன், ஆகிய கழகத்தின் தோழர்கள் கலந்து கொண்டனர். கழகப் பேச்சாளர் தஞ்சை  இரா. பெரியார் செல்வன் சிறப்புரை யாற்றினார். ஒன்றிய அமைப்பாளர் கை.ராஜராஜன் நன்றி யுரையாற்றினார்.

ஒன்றிய, நகர கிளை கழகப் பொறுப்பாளர்கள் அனைத்து கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *