திருப்பதி, டிச.21 ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டம் குடி பண்டா மற்றும் அமரபுரம் பகுதியை சேர்ந்த 14 பக்தர்கள் வாடகை வேனில் திருப்பதிக்கு வந்தனர். ஏழுமலையானை தரிசித்து விட்டு நேற்று (20.12.2024) இரவு வேனில் வீடு திரும்பி சென்று கொண்டு இருந்தனர். மடக சிரா, புல்ல சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்துகொண்டு இருந்தது. அப்போது சாலையோரம் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டு இருந்தது. பக்தர்கள் சென்ற வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக திடீரென மோதியது.
இதில் வேனில் இருந்த 4 பக்தர்கள் படுகாயம் அடைந்து நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
காவல்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக இந்துபுரம் மற்றும் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேலும் உயிரிழப்பு ஏற்படும் என தெரிவித்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யப்பன் சக்தி இதுதானோ?
பேருந்து சக்கரத்தில் சிக்கி அய்யப்ப பக்தர் மரணம்
தேனி, டிச.21 தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 4 பேர் ஒரு காரில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் தங்களது காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்ரோடு பிரிவில் நேற்று (20.12.2024) அதிகாலை 5 மணியளவில் அவர்கள் கார் வந்து கொண்டு இருந்தது அப்போது வத்தலக்குண்டுவில் இருந்து போடி நோக்கி சரக்கு வேன் சென்றது. 2 வாகனங்களும் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இதில் காரில் வந்த அய்யப்ப பக்தர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே காருக்குள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநரும் படுகாயமடைந்தார். கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு வெவ்வேறு திசைகளில் விழுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை யினர் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் பலியான 2 பேர் உடல் களையும் மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படு காயமடைந்தவர்களும் மயக்க நிலையில் இருந்ததால் அவர்களது பெயர் விபரம் தெரியவில்லை.
கோயிலில் தூங்குகிறது!
தமிழ்நாடு கோயிலுக்குச் சொந்தமான
1000 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு.