இமாச்சலப் பிரதேச நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க உதவிக்கரம்

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை 22 – தமிழ்நாட்டிலிருந்து இமாச் சலப் பிரதேசம் சென்ற 12 ஆர்க்கிடெக்ட் மாணவர்கள், அங்கு நிலச்சரிவில் சிக்கி உயிருக்குப் போராடிய தகவல் அறிந்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப் பினரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமாகிய பிரவீன் சக்ரவர்த்தி, அம்மாநில முதலமைச்சரைத் தொடர்ப்பு கொண்டு, அரசு அதிகாரிகளின் உதவியுடன் அவர்களை மீட்டுள்ளார்.

“அந்த ஆபத்தான சூழலில் எங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி, காப்பாற்றியது பிரவீன் சக்ரவர்த்தி அவர் களின் துரிதமான முயற்சிதான்” என்றார், மாணவி கவிஷா.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் டேட்டா அனாலிட்டிக்ஸ் பிரிவுத் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி, “என் வேண்டுகோளுக்கிணங்க, உடனடியாக இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய சுக்வீந்தர் சிங் அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு, நம் தமிழர்களைக் காப்பாற்ற உதவி புரிந்ததற்கு, மாணவர்கள் சார்பாக என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *