இமாச்சலப் பிரதேச நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க உதவிக்கரம்

1 Min Read

சென்னை, ஜூலை 22 – தமிழ்நாட்டிலிருந்து இமாச் சலப் பிரதேசம் சென்ற 12 ஆர்க்கிடெக்ட் மாணவர்கள், அங்கு நிலச்சரிவில் சிக்கி உயிருக்குப் போராடிய தகவல் அறிந்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப் பினரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமாகிய பிரவீன் சக்ரவர்த்தி, அம்மாநில முதலமைச்சரைத் தொடர்ப்பு கொண்டு, அரசு அதிகாரிகளின் உதவியுடன் அவர்களை மீட்டுள்ளார்.

“அந்த ஆபத்தான சூழலில் எங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி, காப்பாற்றியது பிரவீன் சக்ரவர்த்தி அவர் களின் துரிதமான முயற்சிதான்” என்றார், மாணவி கவிஷா.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் டேட்டா அனாலிட்டிக்ஸ் பிரிவுத் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி, “என் வேண்டுகோளுக்கிணங்க, உடனடியாக இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய சுக்வீந்தர் சிங் அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு, நம் தமிழர்களைக் காப்பாற்ற உதவி புரிந்ததற்கு, மாணவர்கள் சார்பாக என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *