கணக்கு தொடங்க ரூ. 500 போதும் வங்கியை விட அதிக வட்டி தரும் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு

viduthalai
1 Min Read

சென்னை, டிச. 20- இன்றைய காலகட்டத்தில் அனைவரி டமும் சேமிப்பு கணக்கு உள்ளது. பணப்பரிவர்த்தனை செய்வதற்கு கண்டிப்பாக தனிநபருக்கு ஒரு சேமிப்பு கணக்கு முக்கியம். அதேபோல அரசாங்கத் திட்டத்தின் பலன்களை பெற விரும்பினாலும், யுபிஅய் மூலம் பணம் செலுத்த விரும்பினாலும் அல்லது இணைய முதலீடுகளை செய்ய விரும்பினாலும் சேமிப்பு கணக்கு இல்லாமல் செய்ய முடியாது. பொதுவாக மக்கள் வங்கியில் தான் சேமிப்பு கணக்கை தொடங்குகின்றனர்.

ஆனால் அஞ்சல் நிலையங்களில் கணக்கு தொடங்கும் போது பல நன்மைகள் கிடைக்கிறது. வங்கி சேமிப்பு கணக்குகளைப் போலவே அனைத்து வசதிகளும் இதற்கும் கிடைக்கும். அதேபோல பிற வங்கிகளை விட அஞ்சல் அலுவலகங்களில் தொடங்கப்படும் கணக்குகளுக்கு வட்டி அதிகம்.

வெறும் 500 ரூபாயில்
கணக்கு தொடங்கலாம்

நீங்கள் வங்கியிலோ அல்லது அஞ்சல் நிலையத்திலோ சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் போது குறைந்தபட்ச இருப்பை செலுத்துவது முக்கியம். இல்லையெனில் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். வழக்கமாக வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச வரம்பாக 1,000 ரூபாய் இருக்க வேண்டும். ஆனால் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கை திறப்பதற்கு 500 ரூபாய் போதும்.

வங்கியைப் போலவே
வழங்கப்படும் வசதிகள்

வங்கியைப் போலவே அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கிற்கும் பல்வேறு வசதிகள் கிடைக்கிறது. கணக்கைத் திறக்கும்போது காசோலைப் புத்தகம், ஏடிஎம் கார்டு, இ-பாங்கிங் போன்ற வசதிகள் கிடைக்கிறது.
இது தவிர, அடல் பென்ஷன் யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஆகியவற்றின் பலன்களையும் பெறலாம். வருமானவரிச் சட்டம் 80TTA-வின் கீழ் சேமிப்பு கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் சம்பாதித்த 10,000 ரூபாய் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *