சோதிடருக்கே தன்னைப் பற்றி சோதிடம் தெரியாதா?இணையரை ஏமாற்றிய ஆசாமி கைது

viduthalai
1 Min Read

சென்னை, டிச.20 சென்னை வேளச் சேரி, பவானி தெரு, கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர்கள் கவிதா – மணிகண்டன் இணை யர்கள். இவர்கள் இருவரும் பெருங்களத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜாதகம் பார்ப்பதற்காக வல்லாஞ்சேரியில் சோதி டர் வெங்கடசுரேஷ் என் பவரை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றனர்.

ஆசை வார்த்தை

அப்போது சோதிடர், உங்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கு, நீங்கள் இருவரும் சேர்ந்து தொழில் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். இதையடுத்து சோதிடர், தனது நண்பர் ஒருவருக்கு 2020ஆம் ஆண்டு, பெட்ரோல் பங்க் தொடங் குவதற்கு உரிமம் வாங்கிக் கொடுத்ததாகவும், நீங்களும் பெட்ரோல் பங்க் ஆரம்பித்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.
இதையடுத்து இருவரை யும் திருமுடிவாக்கத்தில் உள்ள விஜய்பாஸ்கர் என்பவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று ரூ.85 லட்சம் கொடுத்தால் உங்களுக்கு பெட்ரோல் பங்க் வைக்க உடனடியாக லைசென்ஸ் வாங்கி தருவார் என கூறியுள்ளார். இதை நம்பிய இருவரும் 50 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், பணம் கொடுத்து ஆண்டுக்கணக்கில் ஆகியும் பெட்ரோல் பங்க் வைக்க உரிமம் பெற்றுத் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

புகார்

இதைத் தொடர்ந்து கவிதாவும், மணிகண் டனும் சோதிடர் வெங் கடசுரேஷ் மற்றும் விஜய்பாஸ்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சோதிடர் வெங்கடசுரஷை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜய்பாஸ்கரை தேடி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *