மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் அய்.நா. அமைப்பின் விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.20 அய்.நா. அமைப்பின் விருது எனச் சாதனைச் சரிதம் எழுதி வருகிறது மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது; ‘நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் புதுப் புரட்சி, அய்.நா. அமைப்பின் விருது எனச் சாதனைச் சரிதம் எழுதி வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளிக்கு இன்று (19.12.2024) மருந்துப் பெட்டகங்களை வழங்கினேன்!

மருத்துவமனைகளை நாடிச் செல்லவோ, வீட்டுக்கு மருத்துவர்களை வரவழைக்கவோ வசதியில்லாத எண்ணற்றோருக்கு வீடுதேடிச் சென்று ‘பிசியோதெரபி’ அளித்து வாழ்வில் ஒளியேற்றும் சாதனையையும் சத்தமின்றிப் படைத்து வரும் இத்திட்டத்தின் வெற்றிக்குக் காரணமான 14 ஆயிரம் மருத்துவப் பணி யாளர்கள் அனைவருக்கும் என் நன்றி!’ என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *