ரூ.999க்கு 20 மளிகைத் தொகுப்பு புதுத் திட்டம் தொடக்கம்

1 Min Read

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு அமுதம் அங்காடிகளில் குறைந்த விலையில் ரூ.999க்கு 20 மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தொடங்கி வைத்துள்ளார். இந்த தொகுப் பில் மஞ்சள் தூள், அர.சர்க்கரை, பாசு மதி அரிசி, ரவை, மைதா, ஆட்டா, சூரிய காந்தி எண்ணெய், முறுக்கு மாவு, அதிரச மாவு, பிரியாணி மசாலா, சாம்பார் பொடி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

அமைச்சரை தகாத வார்த்தையால் விமர்சனம் செய்ததாக
பிஜேபியைச் சேர்ந்த சி.டி.ரவி கைது

பெலகாவி, டிச.20 கருநாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் லட்சுமி கெப்பாள்கரை தகாத வார்த்தையால் விமா்சனம் செய்ததாக அளித்த புகாரின் பேரில், பாஜக எம்எல்சி சி.டி.ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பேத்கா் பெயரை கூறுவது குறித்து ஒன்றிய அமைச்சா் அமித் ஷா கூறியிருந்த கருத்து தொடா்பாக பெலகாவியில் உள்ள சுவா்ண விதானசவுதா சட்ட மேலவையில் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினா்களிடையே 19.12.2024 அன்று கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் லட்சுமி கெப்பாள்கா் மற்றும் பாஜக உறுப்பினா் சி.டி.ரவி ஆகியோரிடையே காரசார வாக்குவாதம் நடந்தது. அப்போது, லட்சுமி கெப்பாள்கா் குறித்து சி.டி.ரவி தகாத வார்த்தை கூறியதாக தெரியவந்துள்ளது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவையை மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி ஒத்திவைத்தார்.

இதனிடையே, அமைச்சா் லட்சுமி கெப்பாள்கா் அளித்த புகாரின்பேரில், சட்டப் பேரவை வளாகத்தில் இருந்த பாஜக எம்எல்சி சி.டி.ரவியை காவல்துறையினர் கைது செய்தனா்.

இந்த விவகாரம் கருநாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சி.டி.ரவியின் கருத்து தன் மனதை காயப்படுத்தி உள்ளதாக அமைச்சா் லட்சுமி கெப்பாள்கா் செய்தியாளா்களிடம் தெரிவித்தார். சி.டி.ரவியை கைது செய்துள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *