காவிரி நீர் பிரச்சினை – 2 நாளில் முடிவு தெரியும் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

2 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஜூலை 22 – காவிரி நீர் பங்கீட்டில் இன்னும் 2 நாளில் ஒன்றிய அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டில்லி யில் ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சரை சந்தித்து காவிரியில் நீர் திறந்து விடக்கோரி முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்.

பின்னர் டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும் பினார்.காவிரியில் இருந்து மாதந் தோறும் இவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஜூன் மாதம் சுமார் 26 டி.எம்.சி. வரை தண்ணீர் தர வேண் டும். ஆனால் 3 டி.எம்.சி. தான் தண்ணீர் தந்து உள்ளனர். இத னால் டெல்டா பகுதிக்கு இன்னும் 20 தினங்களுக்குதான் தண்ணீர் வழங்க முடியும்.

மழை பெய்தால் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் பயிர் கள் காயும் நிலைமை உள்ளது. இதை முன்கூட்டியே உணர்ந்து தான் கடந்த 5ஆம் தேதியே டில்லி சென்று மத்திய நீர் வளத்துறை அமைச்சரை பார்த்து உடனடியாக தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என வலி யுறுத்தினேன். 

காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றாலும், நீர் பற்றாக்குறை இருந்தாலும் இரு மாநிலங்களுக்கும் பங்கீட்டு தர வேண்டிய பொறுப்பு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உள்ளது. ஆனால் மேலாண்மை ஆணையம் மெத்தனமாக இருக் கிறது. ஆணையம் விரைவாக செயல்பட உத்தரவிடும் அதிகாரம் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத் துக்கு தான் உண்டு.

கடந்த 5ஆம் தேதி நடந்த சந்திப்பால் எந்த பயனும் இல்லாத தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலைமையை விவரமாக நீர் வளத் துறைக்கு கடிதம் எழுதி என்னிடம் தந்தார்.

அந்த கடிதத்தை ஒன்றிய அமைச்சரிடம் கொடுத்து நிலை மைகளை விளக்கினேன். இன்னும் இரண்டொரு நாளில் ஆணை யத்தை அழைத்து இருக்கின்ற நீரை எப்படி பங்கீட்டு வழங்க முடி யுமோ அதை வழங்க உத்தர விடுகிறேன் என ஒன்றிய அமைச்சர் கூறினார். நம்பிக்கையுடன் வந்து உள்ளேன். இந்த நம்பிக்கை பலன் தருமானால் தஞ்சை தரணியில் பயிர்கள் காப்பாற்றப்படும். 

கருநாடகாவுடன் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது. அதனால் பய னில்லை. மேலாண்மை ஆணையம் மூலமாகத்தான் சாதிக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தினால் நாளை எந்த நீதிமன்றத்திற்கும் போக முடி யாது. சில புத்திசாலிகள் நீர்வளத் துறைக்கு கடிதம் எழுதிய முதல மைச்சர் ஆணையத்துக்கே எழுதி இருக்காலாமே என்று கூறுகின் றனர். முதலமைச்சர் பிரதமருக்குத் தான் கடிதம் எழுதுவார். நிலை மையை கருதி அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *