சாகித்திய அகாடமி விருதாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு நமது வாழ்த்தும் பாராட்டும்

viduthalai
1 Min Read

பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர் களுக்கு அவர் எழுதிய ‘‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும்’’ என்ற ஆய்வுத் திறனை அடக்கிய அரிய நூலுக்கு சாகித்திய அகாடமியின் 2024ஆம் ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டிருப்பது,
தகுதியானவருக்குத் தரப்படும்
தகுதியான பரிசும் – தேர்வும் ஆகும்!
ஆற்றல் வாய்ந்த ஆய்வாளர்; திறமையான எழுத்துக் கருவூலம் –தமிழ் – ஆங்கிலப் புலமை நிறைந்த தனித்தன்மை கொண்ட தகைமையாளர் அவர்!
தந்தை பெரியார் குறித்து கடந்த 30 ஆண்டு களுக்கு மேலாக தரவுகள் மேல் தரவுகளைச் சேகரித்து எழுதி முடித்திடும் ‘‘தவம் பூண்டு’’ ஒழுகுபவர் – பகுத்தறிவுப் பண்பாளர்.
அவரது நூல்கள் எப்போதும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் கலங்கரை வெளிச்சம் – பாராட்டி மகிழ்கிறோம் – வாழ்த்துகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
19.12.2024

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *