சாகித்திய அகாடமி விருதாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு நமது வாழ்த்தும் பாராட்டும்

1 Min Read

பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர் களுக்கு அவர் எழுதிய ‘‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும்’’ என்ற ஆய்வுத் திறனை அடக்கிய அரிய நூலுக்கு சாகித்திய அகாடமியின் 2024ஆம் ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டிருப்பது,
தகுதியானவருக்குத் தரப்படும்
தகுதியான பரிசும் – தேர்வும் ஆகும்!
ஆற்றல் வாய்ந்த ஆய்வாளர்; திறமையான எழுத்துக் கருவூலம் –தமிழ் – ஆங்கிலப் புலமை நிறைந்த தனித்தன்மை கொண்ட தகைமையாளர் அவர்!
தந்தை பெரியார் குறித்து கடந்த 30 ஆண்டு களுக்கு மேலாக தரவுகள் மேல் தரவுகளைச் சேகரித்து எழுதி முடித்திடும் ‘‘தவம் பூண்டு’’ ஒழுகுபவர் – பகுத்தறிவுப் பண்பாளர்.
அவரது நூல்கள் எப்போதும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் கலங்கரை வெளிச்சம் – பாராட்டி மகிழ்கிறோம் – வாழ்த்துகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
19.12.2024

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *