தந்தை பெரியாரின் சிலை நன்கொடை

1 Min Read

அய்தராபாத் – ராமோஜிராவ் திரைப்பட நகருக்கு அருகில் உள்ள மானவ விகாச வேதிகா அமைப்பின் வளாகத்தில் திறக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை நன்கொடையாக வழங்கப்பட்டதாகும். தென்காசி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளரும் – தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளருமான வி. ஜெயபாலன் அவர்கள் தந்தை பெரியாரின் சிலையினை வடிவமைத்திட ஆவன செய்து – அந்தச் சிலையினை மானவ விகாச வேதிகா அமைப்பினர் நிறுவிட நன்கொடையாக வழங்கினார். நன்கொடை அளித்த விவரங்கள் பற்றிய குறிப்பு சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் சிலையினை நன்கொடையாக வழங்கிய வி. ஜெயபாலன் அவர்களுக்கு நிகழ்ச்சியில் மானவ விகாச வேதிகா அமைப்பினர் நன்றியினைத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *