ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பதா? முதலமைச்சர் உள்பட தலைவர்கள் கண்டனம்

2 Min Read

சென்னை, டிச.19- நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர்.

மாநிலங்களவையில் 17.12.2024 அன்று பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘அம்பேத்கர், அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது வழக்கமான வாடிக்கை (ஃபேஷன்) ஆகிவிட்டது.

தமிழ்நாடு

 

இதற்கு பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கர் பெயரை மேலும் 100 முறைகூட உச்சரிக்கட்டும்.

ஆனால், அவரது உண்மை யான உணர்வுகள் குறித்தும் அவர்கள் பேச வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றி கவலைப் பட வேண்டும். நாட்டை பற்றியும், மக்களை பற்றியும், அரசமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப் படுவோர் அம்பேத்கர் பெயரைத் தான் சொல்வார்கள். சொல்ல வேண்டும்.

தமிழ்நாடு

துணை முதலமைச்சர் உதயநிதி: அம்பேத்கர் குறித்து அமித் ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். சட்டமேதை அம்பேத்கர் தந்த அரசமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்களுக்கு, அம்பேத்கரின் பெயரை கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால் இன்னும் பல நூறு முறை அவரது பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்.

மேனாள் அமைச்சர் ஜெயக்குமார்: அம்பேத்கரை சிறுமைப்படுத்துபவர்கள் மக்களால் நிராகரிக்கப்படு வார்கள். அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கான பின் விளைவுகளை பாஜக சந்திக்கும்.

தமிழ்நாடு

விசிக தலைவர் திருமா வளவன்: அம்பேத்கர் பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். எவ்வளவு வயிற் றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித் ஷா வெளிப் படுத்தி விட்டார்.

அவர் தனது முகத்திரையை, தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம். சங்பரி வார்கள் அம்பேத்கரை போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் வேலைகள். அம்பேத்கர் பேருரு எடுக்கிறார். ஸநாதனிகளின் சதி முயற்சிகள் சாம்பலாகும்.
மதிமுக முதன்மை செயலர் துரை வைகோ: ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக் கணைகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாத உள்துறை அமைச்சர், அம்பேத்கர் மீது வன்மத்தை கொட்டி இருப்பது பாஜகவின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *