மணிப்பூர் பிரச்சினை நாடாளுமன்றம் இரண்டாம் நாளும் முடங்கியது

2 Min Read

அரசியல்

புதுடில்லி, ஜூலை 22  மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவை யில் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங் களவையில் மணிப்பூர் விவகாரம், அவைக் குறிப்பில் இருந்து வார்த் தைகள் நீக்கம் போன்றவற்றால் டில்லி மசோதா தொடர்பாக அமளி ஏற்பட்டது. 

இதனால் இரு அவை களும் 2-வது நாளாக நேற்றும் முடங்கின. நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தால் எதிர்கட்சிகள் உரிமை முழக்கம் எழுப்பினர் இதனால் இரு அவை களும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், மக் களவை நேற்று (21.7.2023) காலை தொடங் கியதும், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந் திர மோடி பேச வேண் டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர் கள் மீண்டும் முழக்கமிட் டனர். அப்போது குறுக் கிட்ட மக்களவை தலை வர் ஓம் பிர்லா, ‘‘விவா தங்கள் மூலம்தான் பிரச் சினைகளுக்கு தீர்வு காண முடியும். ஆனால், அவையில் விவாதம் நடத்த நீங்கள் விரும்ப வில்லை’’ என்றார். எதிர் கட்சிகள் தொடர்ந்து தங்களை பேசவிட வேண்டும் என்று கூறிய தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக் கப்பட்டது.

மாநிலங்களவை நேற்று காலை தொடங் கியதும், விவாதிக்க உள்ள மசோதாக்களுக்கு ஒதுக்கப்பட் டுள்ள நேரம் குறித்து மாநிலங் களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித் தார். அப்போது, டில்லி அவசர சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்படும் டில்லி அர சின் திருத்த மசோதா குறித்து குறிப்பிட்டார். ‘‘அரசியல் சாசனத் துக்கு எதிராக எந்த மசோதாவை யும் கொண்டுவர விடமாட்டோம்’’ என்று சஞ்சய் சிங் உள் ளிட்ட ஆம் ஆத்மி உறுப்பினர்கள் கூச்ச லிட் டனர்.

அதற்கு தன்கர், ‘‘விதி முறை களின்படி ஒவ்வொருவருக்கும் நேரம் தருகிறேன். நம் நடத் தையை 130 கோடி மக்கள் கவனிக்கின்றனர். நாம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். இது தெரு அல்லது நடைமேடை அல்ல’’ என்றார். ஆனால், ஆம் ஆத்மி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்ட படி இருந்தனர். பிர மோத் திவாரி உள்ளிட்ட காங் கிரஸ் உறுப்பினர் களும் மணிப்பூர் விவ காரம் தொடர்பான பிரச்சி னையை எழுப்பி அமளியில் ஈடு பட்டனர். 

இதற்கிடையே, மணிப்பூர் விவ காரம் குறித்து திரிணமூல் உறுப் பினர் டெரிக் ஓ பிரைன் நேற்று முன் தினம் (20.7.2023) பேசிய தில் பிரதமர் மற்றும் மணிப்பூர் ஆகிய சொற்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

இதுதொடர்பாக ஒழுங்கு பிரச்சினையை ஓ பிரைன் நேற்று எழுப் பினார். மேலும் பல உறுப்பினர்கள் அமளியில் ஈடு பட்டதால், மதியம் 2.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட் டது. மணிப்பூர் விவகா ரத்தால் 2-ஆவது நாளாக நேற்றும் இரு அவை களும் முடங்கின. இரு அவைகளும் 24ஆம் தேதி  வரை ஒத்தி வைக் கப்பட்டுள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *