மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதிகரிப்பு

viduthalai
1 Min Read

மேட்​டூர்,டிச.18- மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 7,368 கன அடியாக அதிகரித்​துள்ளது.

காவிரி நீர்ப்​பிடிப்புப் பகுதி​களில் பெய்​யும் மழையைப் பொறுத்து மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதிகரிக்​கும். இந்நிலை​யில், அணைக்கு 16.12.2024 அன்று விநாடிக்கு 7,148 கனஅடியாக இருந்த நீர்​வரத்து நேற்று (17.12.2024) 7,368 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, கால்​வாய் பாசனத்​துக்கு 300 கனஅடி தண்ணீர் வெளி​யேற்​றப்​பட்டு வருகிறது.

தண்ணீர் திறப்​பைவிட நீர்​வரத்து அதிகமாக உள்ள​தால் அணையின் நீர்​மட்டம் உயர்ந்து வருகிறது. அணை நீர்​மட்டம் நேற்று 118.53 அடியாக​வும், நீர்​இருப்பு 91.46 டிஎம்​சி​யாக​வும் இருந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 13ஆம் தேதி காலை விநாடிக்கு 7,000 கனஅடியாக இருந்த நீர்​வரத்து 14ஆம் தேதி காலை 8,000 கனஅடியாக அதிகரித்​தது. நேற்று வரை அளவில் ​மாற்​றமின்றி 8,000 க​னஅடி​யாகவே நீர்​வரத்து தொடர்​கிறது.

விரைவில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்

தமிழ்நாடு

சென்னை, டிச.18- தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கு மீட்டருக்கு பதிலாக பிரத்யேக செயலி கொண்டு வர உள்ளதாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், புதிய கட்டண விவரத்தை அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும், விரைவில் அதனை அரசு அறிவிக்கும் எனவும் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் ஓடும் ஆட்டோக்களுக்கு 2013ஆம் ஆண்டு 1.8 கி.மீ. துாரத்திற்கு ரூ.25, அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் தலா ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அது மாற்றியமைக்கப்பட உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *