இரசாயன உர நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்

viduthalai
2 Min Read

ஒன்றிய அரசின் ராஷ்ட்ரிய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப் பங்கள் பெறப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் உள்ள 378 தொழிற்பயிற்சி இடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பணியின் விவரங்கள்
பட்டத்தாரி தொழிற்பயிற்சி
கணக்கு நிர்வாகி: 51
செயலகம் உதவியாளர்): 96
ஆட்சேர்ப்பு நிர்வாகி (HR): 35
மொத்தம்: 182
டெக்னீஷியன் தொழிற்பயிற்சி
டிப்ளமோ கெமிக்கல்: 20
டிப்ளமோ சிவில்: 14
டிப்ளமோ கணினி: 6
டிப்ளமோ எலெக்ட்ரிக்கல்: 10
டிப்ளமோ இண்ஸ்ரூமெண்ட்: 20
டிப்ளமோ மெக்கானிக்கல்: 20
மொத்தம்: 90
டிரேட் அப்ரண்டிஸ்
ஆப்ரேட்டர் உதவியாளர்: 74
பாய்லர் உதவியாளர்: 3
எலெக்ட்ரிஷன்: 4
தோட்டக்கலை உதவியாளர்: 6
கருவி மெக்கானிக்: 3
ஆய்வக உதவியாளர்: 14
மருத்துவ ஆய்வகம்: 2
மொத்தம்: 106
மொத்த தொழிற்பயிற்சி இடங்கள்: 378

இதில் எஸ்சி பிரிவில் 56, எஸ்டி பிரிவில் 28 இடங்கள், ஒபிசி பிரிவில் 101 இடங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 37 இடங்கள், பொது பிரிவில் 156 மொத்தம் 378 இடங்கள் உள்ளன.

வயது வரம்பு

தொழிற்பயிற்சி இடங்களுக்கு 01.12.2024 தேதி 18 அன்று வயதிற்கு குறைவாக இருக்கக்கூடாது. மேலும் அதிகப்படியாக 25 வயதிற்கு அதிகம் இருக்கக்கூடாது.

கல்வித் தகுதி

கணக்கு நிர்வாகி பதவிகளுக்கு B.Com, BBA அல்லது பொருளாதாரம் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், அடிப்படை ஆங்கிலம், கணினி இயக்க திறன் அவசியம்.

செயலகம் உதவியாளர் மற்றும் ஆட்சேர்ப்பு நிர்வாகி (HR) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
டெக்னீஷியன் பிரிவில் தொழிற்பயிற்சி இடங்களுக்கு கெமிக்கல், சிவில், கணினி, எலெக்ட்ரிக்கல், இண்ஸ்ரூ மெண்டேசன், மெக்கானிக்கல் ஆகியவற்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஆப்ரேட்டர் உதவியாளர், கருவி மெக்கானிக் மற்றும் ஆய்வக உதவியாளர் பதவிகளுக்கு B.Sc. முடித்திருக்க வேண்டும்.
இதர டிரேட் அப்ரண்டிஸ் பிரிவுகளுக்கு அறிவியல் பாடங் களுடன் கூடிய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழிற்பயிற்சி உதவித்தொகை

பட்டதாரி பிரிவுகளில் உள்ள இடங்களுக்கு ரூ.9,000 உதவித்தொகை வழங்கப்படும். டெக்னீஷியன் பிரிவுகளுக்கு ரூ.8,000 மற்றும் டிரேட் அப்ரண்டிஸ் பிரிவிற்கு ரூ.7,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

தொழிற்பயிற்சி இடங்களுக்கு தகுதியானவர்கள் கல்வித் தகுதியின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு தொழிற்பயிற்சிக்கு நியமிக்கப் படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

ஒன்றிய அரசு நிறுவனத்தில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.rcfltd.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். Trade Apprenticeship பிரிவிற்கு https://apprenticeshipindia.gov.in மற்றும் பட்டப்படிப்பு, டிப்ளமோ பிரிவிற்கு https://nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.12.2024 மாலை 4 மணி வரை சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்படும்.
ஒன்றிய அரசின் ராஷ்ட்ரிய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் உள்ள இப்பணி யிடங்களுக்கு விண்ணப் பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் தேவையான விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *