ராஜஸ்தானில் மாநகராட்சி மூலம் முதல்முறையாக திருநங்கைக்கு பிறப்புச் சான்றிதழ்

Viduthalai
1 Min Read

ஜெய்ப்பூர், ஜூலை 22- ஜெய்ப் பூர் கிரேட்டர் மாநக ராட்சி மூலம் முதல்முறையாக திருநங் கைக்கு பிறப்புச் சான்றி தழ் வழங்கப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளரு மான (பிறப்பு மற்றும் இறப்பு) பன்வர்லால் பைர்வா, ராஜஸ்தானின் முதல் திருநங்கையின் பிறப்புச் சான்றிதழை ஜெய்ப்பூரைச் சேர்ந்த நூர் ஷெகாவத்துக்கு வழங் கினார். ஆண் மற்றும் பெண் பிறப்பு பதிவுகளு டன், திருநங்கைகளின் பிறப்பு பதிவுகளும் இனி மாநகராட்சி போர்ட்ட லில் கிடைக்கும் என்று பன்வர்லால் பைர்வா கூறினார். 

திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஊக்கு விக்கும் வகையில் விழிப்பு ணர்வுத் திட்டமும் தொடங்கப்படும் என்று அவர் கூறினார். பிறப்பின் போது நூர் ஷெகாவத்தின் பாலினம் ‘ஆண்’ என்று பதிவு செய்யப்பட்டிருந் தது குறிப்பிடத்தக்கது. ஆங்கில வழிப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நூர் ஷெகாவத் தற்போது திருநங்கைக ளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

மாற்றுத் திறனாளிகள், ஆண்கள் மற்றும் பெண் களின் பதிவேடுகளுடன் திருநங்கைகளின் பதிவு களை அரசு பராமரிக்க இந்த முயற்சி உதவும் என்று கூறிய நூர் ஷெகா வத், தற்போது திருநங்கை களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க அதி காரிகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *