ராஜஸ்தானில் மாநகராட்சி மூலம் முதல்முறையாக திருநங்கைக்கு பிறப்புச் சான்றிதழ்

1 Min Read

ஜெய்ப்பூர், ஜூலை 22- ஜெய்ப் பூர் கிரேட்டர் மாநக ராட்சி மூலம் முதல்முறையாக திருநங் கைக்கு பிறப்புச் சான்றி தழ் வழங்கப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளரு மான (பிறப்பு மற்றும் இறப்பு) பன்வர்லால் பைர்வா, ராஜஸ்தானின் முதல் திருநங்கையின் பிறப்புச் சான்றிதழை ஜெய்ப்பூரைச் சேர்ந்த நூர் ஷெகாவத்துக்கு வழங் கினார். ஆண் மற்றும் பெண் பிறப்பு பதிவுகளு டன், திருநங்கைகளின் பிறப்பு பதிவுகளும் இனி மாநகராட்சி போர்ட்ட லில் கிடைக்கும் என்று பன்வர்லால் பைர்வா கூறினார். 

திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஊக்கு விக்கும் வகையில் விழிப்பு ணர்வுத் திட்டமும் தொடங்கப்படும் என்று அவர் கூறினார். பிறப்பின் போது நூர் ஷெகாவத்தின் பாலினம் ‘ஆண்’ என்று பதிவு செய்யப்பட்டிருந் தது குறிப்பிடத்தக்கது. ஆங்கில வழிப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நூர் ஷெகாவத் தற்போது திருநங்கைக ளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

மாற்றுத் திறனாளிகள், ஆண்கள் மற்றும் பெண் களின் பதிவேடுகளுடன் திருநங்கைகளின் பதிவு களை அரசு பராமரிக்க இந்த முயற்சி உதவும் என்று கூறிய நூர் ஷெகா வத், தற்போது திருநங்கை களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க அதி காரிகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *