பெரியார் பெருந்தொண்டர் கு.தங்கராசு மறைவு தோழர்கள் இறுதி மரியாதை

1 Min Read

அரியலூர், டிச. 18- அரியலூர் மாவட்டம் அரியலூர் நகர மேனாள் கழக செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கு.தங்க ராசு (வயது 77) அவர்கள் மறைவுற்றார்.
மறைவு செய்தியை அறிந்த தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் பொன் செந் தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் இரா.கே கோவிந்தராஜன், மாவட்ட விவசாய அணி தலைவர் மா சங்கர், அரியலூர் ஒன்றிய தலைவர் சிவக் கொழுந்து, அரியலூர் ஒன்றிய செயலாளர் த.செந்தில், அரியலூர் நகர செயலாளர் ஆட்டோ தர்மா, ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், செந்துறை மதியழகன் உள்ளிட்ட தோழர்கள் அவரது சொந்த ஊரான கொத்தவாசல் கிராமத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செய்தனர். குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *