‘நான் இந்தியனாக வெட்கப்படுகிறேன்’ மணிப்பூர் நிகழ்வு குறித்து பிஜேபி எம்பி வேதனை

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூலை 22  மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் செய்யப்படு கிறது. ஆனால் இது மாநிலம் சார்ந்த சம்பவம் அல்ல. முழு நாட்டிற்கும் அவமானம் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை மாற்று சமூகத்தினர் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர் வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் டில்லியில்  பத்திரி கையாளர்களை சந்தித்த மேனாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க. எம். பி.யு மான கவுதம் கம்பீர், மணிப்பூர் சம்பவம் குறித்து வேதனையுடன் பேசினார். 

அப்போது அவர், “இது மிகவும் வெட்கக்கேடானது. இந்த பிரச்சினை மணிப்பூருக்கு மட்டும் மட்டுப் படுத்தப்படவில்லை என்பதால், என்னை ஒரு இந்தியன் என்று சொல்லிக்கொள்வதில் நான் வெட் கப்படுகிறேன். இது ஒட்டுமொத்த நாட்டின் தலையையும் தாழ்த்தி யுள்ளது, எனவே இதை அரசியலாக் கக்கூடாது” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் செய்யப்படுகிறது. ஆனால் இது மாநிலம் சார்ந்த சம்பவம் அல்ல. முழு நாட்டிற்கும் அவமானம். ஒரு இந்தியனாக நாம் அவமானத்தில் தலை குனிய வேண்டும். மணிப்பூரில் நடந்த சம்பவம் போல் எதிர்காலத்தில் எந்த மாநிலத்திலும் நடக்கக்கூடாது” என தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *